Crime

சென்னை: ஜோலார்பேட்டை சம்பவத்தையடுத்து, ரயில்களின் மகளிர் பெட்டிகளுக்கு அருகே தேவையில்லாமல் சென்றது தொடர்பாக, 889 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

பெற்றோர் மீது கோபம், வெறுப்பு உள்பட பல காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களுக்கு வந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரை மீட்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பயிற்சி வகுப்பு சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.பி.எஃப் காவலர்கள், தமிழக ரயில்வே காவலர்கள் என மொத்தம் 80 பேர் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZbqYkjX

Post a Comment

0 Comments