
புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி மீனவப் பஞ்சாயத்தார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டபோது சரிவர பதில் கூறவில்லையாம். இதைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை சூறையாடியதுடன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக தவளக்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் மணிகண்டனை (25) போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pbC6AFj
0 Comments