Crime

திண்டுக்கல்: ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழி லாளியை, திண்டுக்கல்லில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது பெண், தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் செல்ல ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித் துள்ளார்.

அதே ரயிலில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி சதீஷ் குமார் (30) என்பவர் பெயின்டிங் வேலைக்காக கோயம்புத்தூர் செல்வதற்கு விருதுநகர் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். நேற்று அதிகாலை இந்த ரயில், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதுபோதையில் இருந்த சதீஷ்குமார், அப்பெட்டியில் பயணித்த 26 வயது பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kgXovHP

Post a Comment

0 Comments