
பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி கேரளாவில் ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளது. இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு உள்ளார். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் நாயர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ம் ஆண்டில் தன்னார்வ தொண்டு அமைப்பை தொடங்கினார். கேரளா முழுவதும் சுமார் 170 தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டமைப்பை உருவாக்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZU3to9a
0 Comments