
கோவை: கோவையில் கஞ்சா விற்றதாக மகன் கைது செய்யப்பட்டார். பொய் வழக்கில் கைது செய்ததாகக் கூறி, காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், தனது மகன் மீது போலீஸார் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர் என்று கூச்சலிட்டவாறு, தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அதிர்ச்சியடைந்த போலீஸார் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eHXAxSQ
0 Comments