
சேலம்: சேலத்தில் அதிக கடனால் தாய், தந்தை, மகள் மூவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் 4 ரோடு அருகே உள்ள தெப்பக்குளம் பகுதி முத்தியாலு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). வெள்ளித் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை பால்ராஜின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ts9JToV
0 Comments