
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு, ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டார். இது தொடர்பாக, இரண்டு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மெனால் உதினின் மனைவி சஹிராபேகம். இவர் வேலை தேடி, கடந்த 12-ம் தேதி இரண்டு மகன்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து, பயணிகள் காத்திருப்போர் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது, இவரது மூத்த மகன் ஷாகிப் உதின் (6) திடீரென மாயமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Nivl6Fo
0 Comments