
அபுதாபி செல்லும் விமானத்தில் செல்ல ஜிபிஎஸ் கருவியுடன் வந்த சுவிட்சர்லாந்து நாட்டுப் பயணியின், பயணம் ரத்து செய்யப்பட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னையிலிருந்து அபுதாபி செல்லும் எத்தியார்டு ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மார்டீன் ரங்கேல் (70) என்பவர் இந்த விமானத்தில் அபுதாபி வழியாக, சுவிட்சர்லாந்து செல்ல வந்திருந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது கைப்பையில் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pLVr3Pu
0 Comments