Crime

கோடிக் கணக்கில் ஹவாலா பணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மூளையாகச் செயல்பட்டு தலைமறைவாக இருந்த சைதாப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ. சன்னி லாய்டு உத்தராகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவல் ஆணையர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்திமுனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ராஜா சிங், வருமானவரித் துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PHE8smj

Post a Comment

0 Comments