
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
விருத்தாசலத்தை அடுத்த எம்.வீராரெட்டிகுப்பம் கிராமத் தைச் சேர்ந்தவர் கதிர்காமன் (43). அதிமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோருடன் முதனை கிராம முந்திரித் தோப்புக்குச் சென்று, மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m9w8XKf
0 Comments