Crime

சென்னை: ரவுடி பன்னீர்செல்வம் கொலை குறித்து விசாரிக்க ரவுடி பாம் சரவணனை ஆந்திரா அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன். இவரை கடந்த 14ம் தேதி இரவு தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் ஏற்பட்டதால், பாம் சரவணனை போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது, அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lKVY0qL

Post a Comment

0 Comments