
திண்டுக்கல்: கோவில்பட்டியில் வீட்டில் நகை, பணம் திருடிய கும்பலைச் சேர்ந்த 10 பேரை, கொடைரோடு சுங்கச் சாவடியில் துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மது சாலியபுரத்தைச் சேர்ந்தவர் முகம்மது சையது சுலைமான். இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு எதிரெதிரே 2 வீடுகள் உள்ளன. கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு முகம்மது சையது சுலைமான் தனது குடும்பத்துடன் பழைய வீட்டில் தூங்கினார். மறுநாள் காலை எழுந்து புதிய வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸார் விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/grGuZEQ
0 Comments