Crime

சென்னை: அரசு காப்பீடு திட்டம் ஏற்பாடு செய்வதாக கூறி மூதாட்டிகளிடம் நூதன முறையில் அடுத்தடுத்து நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். சென்னை வடபழனி, வடக்கு மாட வீதியில் வசித்து வருபவர் மூதாட்டி சுசிலா (67). இவர் கே.கே.நகர், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 16-ம் தேதி அந்த மருத்துவமனைக்கு ரத்த மாதிரி கொடுக்க சென்றார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் சுசிலாவிடம், ‘உங்களுக்கு அரசு காப்பீடு திட்டம் பதிவு செய்து தருகிறேன். இதன் மூலம் நீங்கள் இலவச சிகிச்சை பெறுவதோடு, பண பலனும் கிடைக்கும்' என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pZcOzYS

Post a Comment

0 Comments