
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான ரவுடி பாம் சரவணனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர் தொடர்பான ஒரு வழக்கில், அந்த நபரை எரித்துக் கொன்றதாக பாம் சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளர் புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்த பாம் சரவணன்(48). இவர், திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம், இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீச்சு வழக்குகள் உட்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/um1aQPw
0 Comments