
டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவதாக மிரட்டி, ஓய்வுபெற்ற தொலைதொடர்பு நிறுவன பொறியாளரிடம் ரூ.59.40 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள, ஐயப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பழனிசாமி(76). இவர், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மாவட்டப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K1VHIiB
0 Comments