
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு ஜனவரி 20-ம் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து ராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், ராமேசுவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XSsrNpa
0 Comments