
கன்னியாகுமரி அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாதர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் இளைய மகள் பிளஸ் 2 படிக்கிறார். இவர் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து விளையாட்டு அணியில் இடம்பெற்றிருந்தார். கடந்த 25-ம் தேதி 14 மாணவிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியையுடன், திருச்சியில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7O6bhtH
0 Comments