
சென்னை: சென்னையில் அடுத்தடுத்து 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 பிரபல தனியார் பள்ளிகளின் இமெயில் முகவரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6hF4HYs
0 Comments