
தோணி மூலம் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான 12 கிலோ ஹசீஷ் (கஞ்சா எண்ணெய்) போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாலுமி, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பழைய துறைமுகம் பகுதியில் அவர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய துறைமுகத்துக்கு வந்தனர். அதிகாரிகள் உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fmByH3r
0 Comments