Crime

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள், ஆசிரியரை தாக்கினர்.

காரைக்குடி அருகே பொய்யாவயலில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கைலாசம் மகன் சக்திசோமையா (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியில் கணினியை இயக்குவதற்காக பிளக்கை மாட்டியபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை ஆசிரியர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DgHdYhS

Post a Comment

0 Comments