
கும்பகோணம்: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தொடர்ந்த வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்த அவரை என்ஐஏ விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜியாவுதீன் பாகவி(42). இவர், கும்பகோணம் வட்டம் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் அரபி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. சோழபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கியிருந்து, கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PmFdJso
0 Comments