
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் ராஜாஜி நகர் அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்(24). குத்துச் சண்டை வீரரான இவர், மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் அந்தப் பகுதியில் உள்ள ஓர் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் தனுஷிடம் வீண் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளது. உயிருக்கு பயந்து ஓடிய தனுஷை அந்த கும்பல் விரட்டிச் சென்று வெட்டிவிட்டு தப்பியது. இந்த தாக்குதலில் தனுஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v4KoVYm
0 Comments