
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அவரது மனைவி, மாமியார், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்தவர் அதுல் சுபாஷ் மோடி (35). இவருக்கும் உத்தர பிரதேசத்தின் ஜவுன்பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்கானியாவுக்கும் (30) கடந்த 2019 ஜூனில் திருமணம் நடந்தது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக அதுல் பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதியர் பெங்களூருவில் குடியேறினர். கடந்த 2020 பிப்ரவரி 20-ம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C61qWv8
0 Comments