Crime

மும்பை: மகாராஷ்டிராவின் தானே நகரில் வசிக்கும் ஒருவரிடம் சிபிஐ, சுங்க அதிகாரிகளை போல் காட்டிக்கொண்டு ரூ.59 லட்சத்தை சைபர் கிரிமினல்கள் மோசடி செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லியில் இருந்து சுங்கத் துறை அதிகாரி பேசுவதாக கூறி, தானே நகரை சேர்ந்த 54 நபரை ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தானே நபரின் பெயரில் வந்துள்ள ஒரு பார்சல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அதன் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V7mr1KB

Post a Comment

0 Comments