Crime

நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த உதவி பெண் செயற்பொறியாளர் மற்றும் அவரது கணவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டை அரசு உடமையாக்கவும் உத்தரவிடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்தவர் அமலா ஜெசி ஜாக்குலின் (50). இவர், தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1999 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுந்தர்ராஜ் வழக்கு பதிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Qwdirxy

Post a Comment

0 Comments