
'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் ரூ.1.8 லட்சத்தை மர்ம நபர் பறித்துள்ளார். அதோடு வீடியோ காலில் அந்த பெண்ணின் ஆடைகளை களைய செய்து கொடூமைப்படுத்தி உள்ளார்.
'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர். போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, வரிஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி அப்பாவி மக்களை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டுகின்றனர். வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் தொகையை மிரட்டி பெறுகின்றனர். இதுபோன்ற மோசடி மும்பையில் அரங்கேறி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hJzjVdH
0 Comments