
திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த 16-ம் தேதி அதிகாலையில் திரையரங்க வாயிலில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்து, தப்பியோடிய நபர்களைத் தேடி வந்தனர். தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/93pbrqV
0 Comments