
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகை சீதாவின் வீட்டில் 4 1/2 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சீதா கொடுத்த புகாரின் போரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ‘ஆண்பாவம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. பின்னர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சீதா, விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rWHixjq
0 Comments