Crime

சென்னை: 67 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணத்திலிருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். அதை தமிழகத்துக்கு கொண்டு வர இங்கிலாந்திடம் இருந்து அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழமையான சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 1957 முதல் 1967ம் ஆண்டுகளுக்குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் என 4 சிலைகள் திருடப்பட்டது. திருடப்பட்ட இந்த சிலைகள் கடத்தல் கும்பலால் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீஸார் 2020ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/liXjDdv

Post a Comment

0 Comments