
நாமக்கல்: ராசிபுரம் அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து நடந்த சாலை விபத்தில் ஒட்டுநர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.18 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்து மெட்டாலா அருகேயுள்ள கோரைக்கோடு பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்புற டயர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LbWdOvf
0 Comments