
சென்னை: பணி வழங்காத விரக்தியில், அரசு பேருந்தில் ஏறி அத்து மீறி இயக்கி காவல் துணை ஆணையர் அலுவலக சுவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பணியாளரால் அடையாறில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அடையாறில், அடையாறு பேருந்து பணிமனை உள்ளது. இங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் தினமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு குணசேகர் (50) என்பவர் தொழில் நுட்ப பணியாளராக (மெக்கானிக்) பணி செய்து வந்தார். பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்தினால் கடந்த 10 நாட்களாக இவருக்கு பணி ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QIw3UHf
0 Comments