
சைபர் கிரைம் கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி மும்பை ஐஐடி மாணவர் ஒருவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. எனினும் மும்பை பவாய் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பை ஐஐடியின் 25 வயது மாணவர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்து தன்னை டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அதிகாரி என்ற அறிமுகம் செய்துகொண்டுள்ளார். சட்டவிரோத செயல்கள் தொடர்பாக மாணவரின் செல்போன் எண்ணுக்கு எதிராக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் செல்போன் எண் முடக்கப்படுவதை தடுக்க காவல் துறையிடம் இருந்து ஆட்சேபமின்மை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவருடன் பேசுமாறும் அவர் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G5C04EH
0 Comments