
ஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை நேற்று ஆவடி ரயில்வே போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(54). பட்டாபிராம்-கோபாலபுரம் துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக இந்து கல்லூரி ரயில் நிலையம் வந்துள்ளார்.
தட்டிக் கேட்டதால் அடி: அப்போது, முதல் நடைமேடையில் மதுபோதையில் சுற்றித் திரிந்த 4 பேர் பிளாஸ்டிக் பைப்பால், அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட பரம சிவத்தை, போதை இளைஞர்கள் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர். இதில் பரமசிவத்தின் தலை மற்றும் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iJZ1qBs
0 Comments