Crime

ஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலை​யத்​தில் மதுபோதை​யில் ரயில் பயணிகள் மீது தாக்​குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை நேற்று ஆவடி ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்ற​வூர் அருகே உள்ள பாக்கம் பகுதி​யைச் சேர்ந்​தவர் பரமசிவம்​(54). பட்டாபிராம்​-கோபாலபுரம் துணை மின் நிலை​யத்​தில் லைன் இன்ஸ்​பெக்​டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்​தினம் பணி முடிந்து, வீட்டுக்கு செல்​வதற்காக இந்து கல்லூரி ரயில் நிலையம் வந்துள்ளார்.

தட்டிக் கேட்டதால் அடி: அப்போது, முதல் நடைமேடை​யில் மதுபோதை​யில் சுற்றித் திரிந்த 4 பேர் பிளாஸ்​டிக் பைப்​பால், அரக்​கோணம் ரயில் மார்க்​கத்​தில் செல்​லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலரை தாக்​கியதாக கூறப்​படு​கிறது. இதை தட்டிக் கேட்ட பரம சிவத்தை, போதை இளைஞர்கள் பிளாஸ்​டிக் பைப்​பால் சரமாரியாக தாக்​கினர். இதில் பரமசிவத்​தின் தலை மற்றும் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iJZ1qBs

Post a Comment

0 Comments