
சென்னை: அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ் (35). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நாசியாஎன்ற மனைவியும், 6 வயதில் குழந்தையும் உள்ளனர்.
நவாஸின் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், தனது வீட்டு குளியலறையில், வீட்டுவேலை பார்த்து வந்த சிறுமி உயிரிழந்து கிடப்பதாக அமைந்தகரை போலீஸாருக்கு, நவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சிறுமியின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uPiAm47
0 Comments