
தென்காசி: செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. இரவு 7.15 மணி அளவில் கடையநல்லூர் - பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, தண்டவாளத்தில் 2 கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக ரயிலை நிறுத்திய லோகோ பைலட் கற்களை அப்புறப்படுத்திவிட்டு, தொடர்ந்து ரயிலை இயக்கினார். தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LhKrQ2e
0 Comments