
சென்னை: சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் காயடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் வழியில் நேற்று மாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, இன்னோவா கார் ஒன்று தாறுமாறாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த கார், சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து சென்றது. இதில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பலத்த சேதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jIuxl1c
0 Comments