
மதுரை: ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்தா பிரசாத். இவர் கடந்த 2022 ஜூன் 6-ம் தேதி, அப்பகுதியில் நடந்த கலவரத்தின்போது கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அயனவள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் முக்கிய நபரான தீதி தர்மேஷ் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மேலும், இக்கொலையில் ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது சாலைப்போக்குவரத்து துறை அமைச்சராகஇருந்த பினிபே விஸ்வநாத்தின் மூன்றாவது மகன் மருத்துவர் பினிபே ஸ்ரீகாந்த்(31) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் தேடிய நிலையில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LJuC6kx
0 Comments