Crime

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்போர்டு பகுதியில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த 5ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IKG8rp5

Post a Comment

0 Comments