Crime

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்குச் சென்ற திருச்சி நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்து, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வாகனங்களில் வந்திருந்தனர். கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிவாசன் தலைமையில் 5 பேர் ஒரு கார் மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hdtFx7u

Post a Comment

0 Comments