Crime

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயில் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுவதாகவும் அவை பெலகேரி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பெலகேரி துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல டன் இரும்புத் தாதுவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கர்நாடக லோக் ஆயுக்தா கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நடத்தியது. சுங்கம், வனம் அல்லது போக்குவரத்து துறையின் அனுமதி இல்லாமல் சுமார் 8 லட்சம் டன் இரும்புத் தாது பெல்லாரியிலிருந்து பெலகேரி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/trl892S

Post a Comment

0 Comments