Crime

சென்னை: அமெரிக்கா செல்ல போலியான ஆவணங்கள் தயார் செய்து கொடுத்ததாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 22-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், அஜய்குமார் பண்டாரி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்ல, விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். 22-ம் தேதி நேர்முக தேர்வுக்கு வந்தவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது கல்வி சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் போலியாக இருந்தது தெரியவந்தது. எனவே, போலி சான்றிதழ் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Vzh1cC

Post a Comment

0 Comments