
சென்னை: இன்ஸ்ட்ராகிராம் மூலம் அறிமுகமான ஆண் நண்பரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம் குறித்து ராஜமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு, கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் சுமுகமாக பிரிந்தனர். கணவன், மனைவி இருவரிடமும் தலா ஒரு குழந்தை வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஜெயக்குமார் என்ற பெயர் கொண்டவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aBIFOks
0 Comments