
சென்னை: கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து கால் டாக்ஸி ஓட்டுநரிடம் நூதன முறையில் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் கோவிந்த ராஜ். இவருக்கு நேற்று சவாரி அழைப்பு ஒன்று வந்தது. வடபழனியில் இருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் எனக் கூறி புக்கிங் செய்த ஆண் பயணி ஒருவர், வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்தில் டீ குடிக்கலாம் எனக் கூறி வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். அப்போது, தன்னிடம் கையில் ரூபாய் நோட்டுகளாக உள்ளன. அதை வைத்துக்கொண்டு ஜி பே மூலம் எனக்கு பணம் அனுப்புங்கள் என ஓட்டுநர் கோவிந்த ராஜிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். ஓட்டுநர் கோவிந்த ராஜூம், ஜி பே மூலம் அவருக்கு ரூ.7 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aRhTYEZ
0 Comments