
மதுரை: மதுரை அருகே பெண் காவல்ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், 4 மாதங்களாகியும் துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறுகின்றனர்.
மதுரை அருகேயுள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த ஷர்மிளா (42), திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் உதயகண்ணன், வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தங்க நகைகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8o9dpKC
0 Comments