
மும்பை: கடந்த இரண்டு நாட்களாக, சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக மும்பையில் 7 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது.
அப்போது, தலா 100 கிராம் எடையுள்ள 57 தங்கக் கட்டிகள், ரூ.16 லட்சம் நகைகள் ஆகியவற்றை சிபிஐ கைப்பற்றியது. 2022 ஜூன் - ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க நபர் ஒருவரின் கணினி மற்றும் வங்கி கணக்குகளை கைப்பற்றி மோசடி செய்ததாக மும்பையை சேர்ந்த ராத்தி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bonjf06
0 Comments