
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவியை இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு மது குடிக்க வரும்படி அழைத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு பேராசிரியரை தனிப்படைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாநகரப் பகுதியான பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லூரி என்பதாலும் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என சொல்லப்படும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய கல்லூரி என்பதாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் இங்கு ஆர்வமுடன் வந்து படிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FOxScfV
0 Comments