
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் வசூலித்த தகராறில் தள்ளுவண்டி உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் போயம்பாளையம் அபிராமி திரையரங்கம் சாலை கணபதி நகரைச் சேர்ந்தவர் கணபதி (53). இவர் அப்பகுதியில் கணபதி உணவகம் என்ற பெயரில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று (செப் .3) புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், நான் போயம்பாளையம் கணபதி நகரில் கணபதி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8RsDKWU
0 Comments