
ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி மாவட்டம் பாம்புகோவில்சந்தை அருகே தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினின் முன் பக்க இரும்பு பேனல் சேதமடைந்தது. இது பொதிகை ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் சொல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) ரயில் நேற்று மாலை 6:30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டது. இரவு 7:10 மணி அளவில் கடையநல்லூர் - பாம்புகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது ரயில் தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ரயில் மோதியதில் பலத்த சத்தத்துடன் இன்ஜினின் முன் பக்க இரும்பு பேனல் சேதமடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GSAyH18
0 Comments