Crime

சூரத்: இரவுப் பணி மற்றும் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்காக, ரயில்வே ஊழியர்கள் 3 பேர் ரயில்பாதையை சேதப்படுத்தி ரயிலைதடம் புரள செய்ய சதி செய்துள்ளனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பணியாற்றும் ரயில்வே டிராக்மேன்கள் சுபாஷ், மனீஷ் மிஸ்திரி, சுபம் ஜெய்ஸ்வல் ஆகியோர் ரயில்பாதையை ஆய்வு செய்வதற்காக சென்றனர். அன்று காலை 5.30 மணியளவில் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து தண்டவாளத்தின் ஃபிஸ் பிளேட்டுகள் மற்றும் கிளிப்புகள் அகற்றப்பட்டு ரயிலை தடம்புரளச் செய்யும் செயலில் சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ckfQlSn

Post a Comment

0 Comments