
திருப்பூர்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகசுரேஷ்(41). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி விஜயலட்சுமி(42), மகள் முத்தீஸ்வரி(6). இவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் அணைக்காடு பகுதியில் வசித்துவந்தனர். இந்நிலையில், நேற்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 பேரும் விஷமருந்திய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sP0SbuC
0 Comments